ஜனாதிபதியின் முதலாவது மக்கள் பேரணிக் கூட்டம் அனுராதபுரத்தில் !

ஜனாதிபதியின் முதலாவது மக்கள் பேரணிக் கூட்டம் அனுராதபுரத்தில் !

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் மக்கள் பேரணிக் கூட்டம் எதிர்வரும் (17) அநுராதபுரம் சல்காது விளையாட்ட ரங்கில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மேற்படி முதலாவது மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மேலும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கூட்டத்தில் மேற்படி கட்சிகள் அமைப்புகளின் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )