27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி !

27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி !

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 110 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 27 ஆண்டுகளில் முதல் முறையாக 2-0 என
தொடர் வெற்றியை பெற்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோ (95) மற்றும் குசல்
மெண்டிஸின் (59) சிறப்பாட்டத்தின் மூலம் 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கே சுருண்டது.

துனித் வெள்ளாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன்
மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜெப்ரி வென்டர்சே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கைஅணி கடைசியாக 1997 ஆம் ஆண்டிலேயே இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )