பணவீக்கம் 69 வீதத்திலிருந்து தற்போது 1.7 வீதமாக குறைவடைந்துள்ளது !

பணவீக்கம் 69 வீதத்திலிருந்து தற்போது 1.7 வீதமாக குறைவடைந்துள்ளது !

அரசாங்கம் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளால் பணவீக்கம் 69 வீதத்திலிருந்து 1.7
வீதமாகக் குறைந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின்
பொருளாதார வேகம், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால்,
தற்போது பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் முடியாமல் போயிருக்கும் அத்துடன் பாராளுமன்ற கட்டிடமும் அழிவடைந்திருக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )