ஓடுபாதை அத்துமீறலுக்காக அருண தர்ஷன தகுதி நீக்கம்

ஓடுபாதை அத்துமீறலுக்காக அருண தர்ஷன தகுதி நீக்கம்

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாக பதிவாகியிருந்த நிலையில், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )