தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு !

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு !

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை
ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

எனினும் நேற்றைய தினம் அதற்கான காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்கும் காலம் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை,ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் முற்பகல் 11:30 மணிவரை
வேட்புமனு தாக்கல் இடம் பெறவுள்ளது.

அந்த காலத்துக்குள்ளேயே ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )