பங்களாதேஷில் மீண்டும் கலவரம் :70 பேர் பலி : 3 நாட்கள் பொது விடுமுறை !

பங்களாதேஷில் மீண்டும் கலவரம் :70 பேர் பலி : 3 நாட்கள் பொது விடுமுறை !

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

அதற்கமைய நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷில் போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை, முழுமையான ஊரடங்கு சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று முதல் 3 நாள்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பின்னர் அவர்கள் முன்னெடுத்த போராட்டம் அந்த நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல எனவும் தேசத்தைச் சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் எனவும் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )