நல்லூர் வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி !

நல்லூர் வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ். கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையில் மாநகரசபை ஆணையாளர் தலைமையில் நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களைச் சந்தித்த மாநகர சபை
ஆணையாளர் நல்லூர்க் கந்தன் ஆலயதிருவிழா தொடர்பில் கலந்துரையாடி
சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன எனவும் திருவிழா ஏற்பாடுகள்
அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் திருவிழா காலத்தில் பல்வேறு நடைமுறைகள் தொடர்பில்
அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அத்தகைய அனைத்து நடைமுறைகளையும்
அனைவரும் பேண வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

அதற்கமைய நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்
கைகள், நடைமுறைகள், தீர்மானங்கள்தொடர்பில் மாநகர சபை அறிவித்தல்
விடுத்துள்ளது.

ஆலயச் சூழலில் ஆலய வெளி வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கும்.

    பிரதான வீதித்தடைகள்: பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம், அரசடிச்சந்தி, கோயில்வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச்சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்
    கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

    கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும்மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்தி சந்தியை அடைந்து யாழ் நகரை அடையமுடியும்.

    யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும்.

    விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும். கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறைவீதியை அடைந்து பயணிக்க முடியும்.

    தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள் நுழைந்து ஸ்ரீமுருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிரக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும்.

    ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    உற்சவ காலங்களில் சிறுவர்களைக் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது.

    ஆலய வெளி வீதி குழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது.

    உற்சவ காலங்களில் ஆலயச்சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

    உற்சவ காலங்களில் ஆலயவெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

    உற்சவ காலங்களில் ஆலயச்சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்.

    உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப் பிரகரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஆலயச் சூழலில் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்யவது
    தவிர்க்கப்பட்டுள்ளது.

      CATEGORIES
      TAGS
      Share This

      COMMENTS

      Wordpress (0)
      Disqus ( )