வனிந்து ஹசரங்கவை தடை செய்ய காவியா மாறன் கோரிக்கை!

வனிந்து ஹசரங்கவை தடை செய்ய காவியா மாறன் கோரிக்கை!

இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க போன்ற வீரர்களை தடை செய்ய வேண்டும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியாமாறன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐ. பி. எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இதனையொட்டி ஐ. பி. எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

இதில் அனைத்து ஐ. பி. எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்தது.

இதன்போது பெரும்பாலான அணிகள் 4 இற்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன.

அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்துக்கு பதிலாக சிறிய ஏலம் நடத்துவதை விரும்புவதாக தெரிவித்தன.

இந்த நிலையில் ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து சொந்த காரணத்துக்காக வெளியேறினால் அவர்களை தடை செய்ய வேண்டும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கடந்த சீசனில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை வீரர் ஹசரங்க 1. 5 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

ஆனால், குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டதால் அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடவில்லை. எனவே, இவ்வாறான வீரர்களை தடை செய்ய வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியாமாறன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )