“இஸ்ரேலை பழிக்குப்பழி வாங்குவோம்” ; ஈரான் உச்ச தலைவர்

“இஸ்ரேலை பழிக்குப்பழி வாங்குவோம்” ; ஈரான் உச்ச தலைவர்

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில்,

“ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது. எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )