ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுன இன்று முடிவு !

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுன இன்று முடிவு !

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன இன்று அறிவிக்குமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள்
ஜனாதிபதி, கட்சியின் செயற்குழு இன்று கூடி இதற்கான தீர்மானத்தை
மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட் பாளர் தொடர்பில் தீர்மானம்
எடுக்கப்பட்டு விட்டதா? என எழுப்பிய கேள்விக்கு திங்கட்கிழமை
வரை சற்று பொறுங்கள் என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவின் பெயர் அடிபடுகிறதே? அவர் பொதுஜன பெரமுன கட்சியின்
மேடைகளில் அமர்ந்திருக்கிறாரே? என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முன்னாள்
ஜனாதிபதி,

அவர் எங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்தானே எனவும் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் நிற்கிறாரே அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தீர்மானம் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்
குப் பதிலளித்த அவர்,

எமது கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அனைத்தையும் கட்சியே தீர்மானிக்க வேண்டும்.

எமது கட்சி எதை தெரிவிக்கிறதோ அதற்கே நாம் செவிமடுப்போம்.

ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தால் அதை நாம் முழுமையாக ஆதரிப்போம்.

மாறாக,அவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவோம் என கட்சி தீர்மானித்தால்
அதற்கே நாம் இணக்கம் தெரிவிப்போம் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )