ஸ்பைடர்மேனுக்கு அபராதம் விதித்த பொலிஸார்

ஸ்பைடர்மேனுக்கு அபராதம் விதித்த பொலிஸார்

டெல்லியில் ஆதித்யா என்ற 20 வயது இளைஞர் ஸ்பைடர்மேன் உடையணிந்து ஓடும் காரின் மேல் அமர்ந்து ஆபத்தான முறையில் அதனை ரீல்ஸ் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சீட் பெல்ட் அணியாமல் ஆபத்தான முறையில் கார் ஓட்டியதாக ஆதித்யா மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் கீழ் அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இல்லையென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆதித்யா இதே போல் ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் ஒட்டி ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )