ஐந்து மாத தமிழ் கர்பிணி தீ விபத்தில் உயிரிழப்பு !

ஐந்து மாத தமிழ் கர்பிணி தீ விபத்தில் உயிரிழப்பு !

மொரட்டுவ தந்தெனியவத்தவில் கடன் பிரச்சனை காரணமாக ஐந்து மத கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னை தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவன் பலரிடம் கடன் பெற்றுள்ள நிலையில் கடன் வழங்கியவர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான குறித்த ஐந்து மாத கர்ப்பிணி கடந்த ஒரு வாரத்திற்கு முன் தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளன குறித்த கர்பிணி பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (19) உயிரிழந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )