பியூமாவுக்கு விளக்கமறியல்

பியூமாவுக்கு விளக்கமறியல்

திட்டமிட்ட குற்றவாளி என கூறப்படும் ‘பியூமா’வை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (18) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ‘பியூமா’ டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

பியும் ஹஸ்திக அல்லது பியூமா, குடு சலிந்துவின் முக்கிய உதவியாளராகக் கருதப்படுகிறார். இவர் பெப்ரவரி 09, 2021 அன்று டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )