வெட்டி கொல்லப்பட்டார் ‘பொடி அய்யா’ : இலங்கையில் தொடரும் வர்த்தகர்கள் கொலை !

வெட்டி கொல்லப்பட்டார் ‘பொடி அய்யா’ : இலங்கையில் தொடரும் வர்த்தகர்கள் கொலை !

மொரட்டுவை லக்ஷபதிய செஞ்சிலுவை தோட்ட பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘பொடி அய்யா’ என அழைக்கப்படும் 41 வயதான ஹரேந்த்ர குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளத்துடன் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நேற்றிரவு (14) 11 மணியளவில் வீட்டிலிருந்த கூச்சலிடும் சத்தம் கேட்டதாகவும் பின்னர் பிரித் ஓதும் சத்தம் கேட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகரின் மனைவி கூச்சலிடுவதை தடுக்கும் வகையில் அவரின் வாயை கயிறுக்கொண்டு கட்டி வைத்துள்ளனர்.

பின்னர் மனைவி எவ்வாறாவது முயற்சி செய்து தனது கையடக்க தொலைபேசியில் பிரதேசவாசி ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதற்கமைய வீட்டிற்கு வந்த பிரதேசவாசி, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )