‘ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா’: ட்ரெண்டாகும் சூர்யா – ஜோதிகா ஜோடி

‘ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா’: ட்ரெண்டாகும் சூர்யா – ஜோதிகா ஜோடி

நடிகை ஜோதிகா வெளியிட்ட சமூக வலைதள பதிவு இணையத்திதில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தம்பதிகளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், இயக்குனர் அட்லி, விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இந்திய திரை உலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது தனது கணவர் சூர்யா அணிவித்த, இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை, அவர்கள் அன்பின் அடையாளமாக இந்த திருமணத்திலும் அணிந்து வந்திருந்தது வெகுவாக பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்த விழாவின் போது சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா” என சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடல் வரிகளை கேப்ஷனாக கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )