கழிவகற்றும் பௌசர் மோதியதில் இருவர் படுகாயம் !

கழிவகற்றும் பௌசர் மோதியதில் இருவர் படுகாயம் !

நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர் நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டையிழந்து காருடன் மோதி மீண்டும் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற இருவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த குறித்த இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும் மாநகர சபை வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )