கொழும்புத் துறைமுகத்தில் போர்க்கப்பல்

கொழும்புத் துறைமுகத்தில் போர்க்கப்பல்

துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
 
152 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் என்பவர் கடமையாற்றுகிறார். டோகனுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இங்கு இடம்பெற்றுள்ளது.
 
குறித்த கப்பல் நாளை (11) வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்றும், அதன் மாலுமிகள் இலங்கையின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )