இலங்கை பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 மோப்ப நாய்கள்

இலங்கை பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 மோப்ப நாய்கள்

இலங்கை பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு  நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதில்  21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும்  அடங்குவதாகவும்  குறித்த நாய்களின் மொத்த மதிப்பு இலங்கை மதிப்பில் 50 கோடியே 80 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )