ஸிகா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை !

ஸிகா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை !

இந்தியாவில் பரவும் ஸிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை நுளம்பு வாயிலாகவே ஸிகா வைரஸ் பரவி வருகிறது.

குறிப்பாக, மஹாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பமான பெண்கள் உள்பட7 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஸிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புனேவில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 7 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவலி, மூட்டு வலி மருத்துவமனைகள் அனைத்தையும்
கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால், மக்கள் வைத்தியரை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )