சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. 

இதற்கமைய, இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )