விடுதலை கோரி ஹிருணிகா மனு தாக்கல்

விடுதலை கோரி ஹிருணிகா மனு தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள 3 வருட சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு  ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான மனு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )