கதிர்காமத்திற்கான  காட்டுப்பாதை திறந்து வைப்பு

கதிர்காமத்திற்கான  காட்டுப்பாதை திறந்து வைப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )