மன்னாரில் பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

மன்னாரில் பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

மன்னார் – மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 8 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் (28) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

09 வயதுடைய 8 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் மாணவர் ஒருவர் தாம் வீட்டிலிருந்து கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை ஏனைய மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.

அதனை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த 8 மாணவர்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )