பொது மலசலகூடத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு

பொது மலசலகூடத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது  மலசலகூடத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர்  ஒருவரின் சடலம் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது  மலசலகூடத்தில் இருந்து மீட்க்கப்பட்டது.

இந்நிலையில் அதே பொது மலசலகூடத்தில் இன்று (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )