24 மணிநேரத்தில் 807 பேர் கைது

24 மணிநேரத்தில் 807 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால யுக்திய தேடுதலின்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலிலுள்ள 34 சந்தேக நபர்களும் உட்பட 807 பேர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த தேடுதலின்போது 52 கிலோ கிராம் 616 மில்லி கிராம் ஹெரோயின், 142 கிலோ கிராம் 453 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், பாதாள உலகக் குழுவிற்கு எதிரான நீதி நடவடிக்கையின் கீழ் 03 பதிவு செய்யப்பட்ட பாதாள உலகக் குழு குற்றவாளிகள் நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 778 பதிவு செய்யப்பட்ட பாதாள உலகக் குழு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )