பொது மலசலகூடத்தில் சடலம் மீட்பு

பொது மலசலகூடத்தில் சடலம் மீட்பு

நுவரெலியா பஸ் நிலையத்தின் பொது மலசலகூடத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை மலசலகூடத்தில் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் குறித்த நபர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. நுவரெலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய ருவன் எலியா என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )