30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நேற்று (25) மாலை  பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். அங்கு பாடசாலையை ஒட்டியுள்ள வீட்டில் குளவி கூடு கட்டப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதையடுத்து, 22 மாணவர்களும் 8 மாணவிகளும், ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )