மிக்ஸருக்குள் இருந்த பொரித்த பல்லி

மிக்ஸருக்குள் இருந்த பொரித்த பல்லி

யாழ். செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் ஞாயிற்றுக்கிழமை (23) பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23)  இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இப்பூஜையில் கலந்துக்கொண்ட ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கியபோது அதனுள் பொரித்த நிலையில் பல்லியொன்று காணப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை பெற்றுக்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )