மின்சார கட்டண திருத்தம் ஜூலையில் அறிவிப்பு !

மின்சார கட்டண திருத்தம் ஜூலையில் அறிவிப்பு !

மின்சார கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தொடர்பில், எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி, அறிவிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில்
பொது மக்களிடமிருந்து எழுத்து மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 08வரை முன்னெடுக்கப்படும் என்றும் அதனையடுத்து ஜூலை 15 ஆம் திகதி கட்டணத்திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களிடம் நேரடியாக கருத்துக்களை கோரும் நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில், மின்சாரசபை முன்மொழிந்துள்ள யோசனைகள் அண்மையில் பொது பயன்பாட்டு ஆணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )