யாழ் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம் !

யாழ் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம் !

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் மற்றும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அருண் சித்தார்த்,

‘இந்த வாய்ப்புபை பெற்றுக் கொடுத்தமைக்கு நன்றி .

நான் எப்பொழுதும் தேசியவாதக் கருத்துக்களையே கொண்டிருந்தேன்.

ஒரு இலங்கையனாக, இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன்.

நான் தமிழனாக இருக்கலாம், இன்னொருவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது சிங்களவராக இருக்கலாம், இது எனது நாடு, இந்த நாடுதான் எனக்கு கல்வியை கொடுத்தது, இந்த நாடுதான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.

அதனால் இந்த நாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்,எனவே எனது சித்தாந்தத்துடன் பொருந்தக்கூடிய ஒரு முகாமைத் தேடிக்கொண்டிருந்தேன் , அதனால் இந்த முகாமை தெரிவு செய்தேன் ‘என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )