வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (20) மிஹிந்தலை பலுகஸ்வெவ பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

குறித்த விபத்தில் லொறியில் பயணித்த உதவியாளரும், லொறியின் உரிமையாளரும் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் லொறியின் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )