பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் !

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் !

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுராதபுரத்திற்கு வரும் யாத்திரிகர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இந்த விசேட போக்குவரத்து வசதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .

இதேவேளை, இந்த ஆண்டு பொசன் போயா தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )