வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்

வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து இன்று (18) 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமணம் வைபவம் ஒன்றுக்கு குறித்த ஆண் குழந்தையை அவருடைய பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். அங்கு குறித்த குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் தீடிரென காணாமல் போனதை தொடர்ந்து நேற்று (17) மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஓன்றினை பதிவு செய்தனர்

முறைபாட்டுக்கு அமைய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கெமராவின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குழந்தை காணாமல் போன சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )