தட்டுப்பாடாகவுள்ள மயக்க மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு இன்று விநியோகிக்க திட்டம்

தட்டுப்பாடாகவுள்ள மயக்க மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு இன்று விநியோகிக்க திட்டம்

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள மயக்க மருந்துகளை இன்று விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுவரை தனியார் நிறுவனங்களிடமிருந்து மயக்க மருந்துகளை கொள்வனவு செய்து, சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் மயக்க மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

இதனால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக தேசிய வைத்தியசாலையின் முகாமைத்துவம் தெரிவித்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )