மகளை தவறான முறையில் காணொளி எடுத்த தாய் கைது

மகளை தவறான முறையில் காணொளி எடுத்த தாய் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவமானது புதன்கிழமை (12)  புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது  இரண்டு  பெண் பிள்ளைகளை கொண்ட  32 வயதுடைய  தாய்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை தவறான முறையில் தனது கைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.   இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து  குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )