டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 900ற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5,624 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டாவது அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகிய மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )