ரயில் மோதி தந்தையும், மகளும் பலி!

ரயில் மோதி தந்தையும், மகளும் பலி!

எந்தரமுல்ல பகுதியில் ரயில் மோதி இருவர் பலியாகியுள்ளனர்.

காரில் பயணித்த தந்தையும் மகளுமே, ரயில் கடவையில் வைத்து ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

எந்தரமுல்ல பகுதி வழியாக வத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்று, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளது.

ரயில் கடவையில் பாதுகாப்பு சமிக்ஞை செயற்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, ரயில் கடவை ஊடாக சாரதி, காரை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பியகம – கோணவல பகுதியைச் சேர்ந்த 54 வயதான தந்தை மற்றும் 22 வயதான மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )