காணாமல் போன மனைவிகள் ; கணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

காணாமல் போன மனைவிகள் ; கணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய  சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

வத்தளையைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது குழந்தையை கந்தானையில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது அங்கு கடமையாற்றி வரும் 29 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவருடன் அவருக்கு காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, குறித்த ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரு மாதத்திற்கு முன்பு தங்கள் வீடுகளில் இருந்து காணாமல் போயுள்ளனர். அதனையடுத்து அவர்களது கணவர்கள் அவர்கள் காணாமல் போனதாக கந்தானை மற்றும் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்து, இரு பெண்களின் புகைப்படங்களையும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பெண்களையும் அடையாளம் கண்டுள்ளார்.

கண்டி பொலிஸார் அவர்களைக் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், அவர்கள் கண்டி சுடுஹும்பொல பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்ததும் அவரகள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர்களது கணவர்கள் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அப்போது குறித்த இரு பெண்களும் தங்களை பிரிக்க வேண்டாம் என்று பொலிஸாரிடமும், அவர்களது கணவர்களிடமும் அழுது புலம்பியுள்ளனர். மேலும், வீடு திரும்ப வேண்டும் என்று தங்கள் குழந்தைகளின் வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களின் எதிர்ப்பையும் மீறி, ஒரு பெண் தனது கணவரால் வலுக்கட்டாயமாக வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்றொருவர், வேறு வழியில்லாமல் அழுது புலம்பியபடி, தயக்கத்துடன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீடு திரும்பியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )