இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்

இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்

முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் இன்று (07) இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே கடற்படையினரும் மீனவர்களும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )