மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

கேகாலை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக நேற்று (04) பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குறித்த பள்ளத்தில் குழந்தை இருந்தபோது, ​​அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அங்கு வந்த பிரதேசவாசிகள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )