சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியவர் தலைமறைவு

சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியவர் தலைமறைவு

பதவிய, வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வயது சிறுவனை கொடூரமான முறையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பத்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவனை கொடூரமாகத் தாக்கும் காட்சியை அயலவரொருவர் காணொளியாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதிலும், சந்தேகநபர் ஏற்கனவே பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் உள்நாட்டில் குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படுபவரெனவும், இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தச் சிறுவனை கொடூரமாகத் தாக்கியுள்ளதாகவும், அவருக்கு பயந்து எவரும் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கவில்லையெனவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பத்நுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )