கனமழையால் வெள்ளப்பெருக்கு

களு கங்கையின் குடா கங்கைப் படுகையில் உள்ள மில்லகந்த பிரதேசத்தில் 149.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ள நிலையில், இன்று காலை 9 மணியளவில் அது பெரும் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் புலத்சிங்கள – களுத்துறை வீதி உட்பட பல பிரதான வீதிகளும் சுமார் 300 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நில்வலா ஆற்றின் அனைத்து நீர் அளவீடுகளும் வழமையான நீர்மட்டத்தை தாண்டியுள்ளதுடன், பிட்டபெத்தர பகுதி வெள்ள மட்டத்தை எட்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )