சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை

சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

குறித்த பரிந்துரை அனுமதிக்காக அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்போது, பரிந்துரை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )