சீரற்ற காலநிலையால் 33,960 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 33,960 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (23) விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடும் காற்று மற்றும் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைக்கு அமைய மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்படி மேல் மாகாணத்தில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 19,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )