ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி

ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி

புஸ்ஸ பிந்தாலிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,வெசாக் அலங்காரங்களை பார்வையிடச் சென்ற போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும், உயிரிழந்த மூவரும் உறவினர்கள் எனவும் உயிரிழந்த இளைஞர்கள் கெக்கில்லமண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )