2 நாட்களில் 20 மரங்கள் முறிவு

2 நாட்களில் 20 மரங்கள் முறிவு

கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர எல்லையில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )