ஈரானின் புதிய ஜனாதிபதியாகிறார் முகமது முக்பர்

ஈரானின் புதிய ஜனாதிபதியாகிறார் முகமது முக்பர்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக ஜனாதிபதியாக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )