ஜனாபதிபதி – இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இடையில் சந்திப்பு

ஜனாபதிபதி – இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

கடல்சார் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது ஆதரவை உறுதிப்படுத்துவதாக தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும் எனவும், இலங்கையில் நேரடி வெளிநாட்டுகளை ஊக்கப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )