பஸ் தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் பலி (படங்கள்)

பஸ் தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் பலி (படங்கள்)

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே பாலர் பாடசாலை சிறுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.

நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களுடன் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்றே நேற்று (01) இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந் நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பஸ்ஸில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பஸ் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )