இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்களையும் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )